Wednesday 19 November 2014

ஸ்ரீ ஹனுமான் பயவிமோசன மந்திரம் :-





அஞ்சனாகர்ப்ப சம்பூதாய கபீந்த்ரோ சர்வோத்தம |
ராமப்ரிய நமஸ்துப்யம் ஹனுமந் ரக்ஷ ரக்ஷ சர்வதா ||


இரவில் தூங்கும் போது துர்சக்திகள் பிடித்து அழுக்குவது,பயங்கர கனவு கண்டு விழித்துக்கொள்வது ,அமானுஷ்ய சத்தங்கள் காதில் விழுந்து பயப்படுதல் நீங்க செவ்வாய்க்கிழமை அன்று ஹனுமனுக்கு கொய்யாப்பழம்,வெற்றிலை,பாக்கு,பழங்கள்,உளுந்துவடை படைத்து  முன்னால் விபூதி அல்லது செந்தூரம் வைத்து மேற்கண்ட மந்திரத்தை 108 தடவை ஜெபிக்கவும்.பின்னர் உறங்கும் முன் அந்த விபூதி அல்லது  செந்தூரத்தை நெற்றி அணிந்து கொள்ள மேற்சொன்ன தீமைகள் ஏற்படாது.தினமும் இவ்வாறு செய்து வரவும்.

வீட்டில் பேய், பிசாசு,மந்திரங்களால் அல்லது  தீய சக்திகளின் தொல்லை இருந்தால் இந்த மந்திரத்தைத் தேய்பிறை செவ்வாய்கிழமை (அன்று இப்பூஜையைச் செய்பவருக்குப் படுபக்ஷி நாளாக இருக்ககூடாது)   ஹனுமனுக்கு கொய்யாப்பழம்,வெற்றிலை, பாக்கு,பழங்கள், உளுந்துவடை படைத்து  முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்து அதில் கொஞ்சம் துளசி இலைகளைப்  போட்டு ,விபூதி வைத்து மந்திரத்தை 1008 தடவை  ஜெபம் செய்யவும்.ஜபம் முடிந்ததும் அந்த விபூதியை செம்பில் உள்ள நீரில் போட்டு  அந்த தீர்த்தத்தை வீட்டின் உட்புறம் ,வெளிப்புறம்,வீட்டில் உள்ளோர் மீதும் வெற்றிலை கொண்டு தெளித்து விடவும்.இவ்வாறு 3 செவ்வாய்க் கிழமைகள்  செய்ய எந்த துஷ்ட சக்திகளாலும் துன்பம் நேராது.


                      வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com
  


No comments:

Post a Comment