Tuesday 6 May 2014

குரு வந்தனம் :-




இது ஒரு உபநிஷத சுலோகம்.முற்காலத்தில் குருகுலத்தில் எந்த ஒரு போதனை தொடங்கும் போதும் சீடர்கள் இந்த ஸ்லோகத்தைச்  ஜெபித்த பின்னரே தொடங்கப்படும்.

வேதம் ,மகான்கள் எழுதிய நூல்கள்,உபநிஷத் போன்ற தெய்வீக நூல்களைப் படிக்கத் துவங்கும் போது இந்த ஸ்லோகத்தை ஜெபித்து அந்த நூலை எழுதிய மகானை, ரிஷியை மனதார வணங்கி அவரின் திருவடிகளை சிரசின் மேல் தியானித்துப் பின்னர் படிக்கத் துவங்கினால் அந்த நூலை இயற்றிய ரிஷி,ஞானி என்ன பொருளில் அதை எழுதினாரோ அந்த மெய்ப்பொருள் நமக்கு விளங்கும்.
தியானம் செய்யத் துவங்கும் முன்னரும் அவரவர் குருவை வணங்கி இதை ஜெபித்துப் பின் தியானம் செய்ய தியானம் நன்கு சித்திக்கும்.

சுலோகம்:-

ஓம் சஹனா வவது||
சஹனௌ புனக்து ||
சஹ வீர்யம் கரவாவஹை ||
தேஜஸ்வி நாவதீத மஸ்து  ||
மா வித் விஷாவஹை ||

பொருள்:-நம்மை இறைவன் பாதுகாப்பானாக||
நாம் மகிழ்ச்சியாய் இருக்கவும்,உழைக்கவும் இறைவன் அருள்வானாக |
நமது கல்வி நிறைவானதாகவும் பலனளிப்பதாகவும் அமைய இறைவன் அருள்வானாக  ||
நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க அருள்வானாக ||

தலை உச்சியில்(சஹஸ்ராரத்தில்) கீழ்க்கண்ட முத்திரையைப்  போட்டபடி  இந்த மந்திரத்தை ஜெபிக்க பன்மடங்கு பலன் தரும்.



வாழ்க வையகம் ||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment