Friday 9 May 2014

நோய் நீக்கும் மந்திரங்கள்

1.ஆரோக்ய ப்ரத ஸ்ரீ தன்வந்திரி மந்திரம் :-

வடக்கு நோக்கி அமர்ந்து முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு   கீழ்க்காணும் மந்திரத்தை 108 தடவை ஜெபித்துப் பின்னர் வலது கையின் நடு மூன்று விரல்களை  நீரைத்தொட்டபடி வைத்து  ''நான்  ஜெபித்த மந்திரத்தின் சக்தி இந்தத் தீர்த்தத்தில் இறங்கட்டும் '' என்று சொல்லிப் பின்னர்  தன்வந்திரி பகவானை வியாதிகள் குணமாக ,அதன் தாக்கம் குறைய வேண்டி அந்த நீரை அருந்தி வரவும்.கொஞ்சம் கொஞ்சமாக வியாதியும் அதன்  தாக்கமும் குறையும். முடிந்தால் அந்த நீரில் கொஞ்சம்  துளசி இலைகளைப் போட்டு ஜெபிக்க நல்ல பலன் தரும்.

ஓம் ஹ்ரீம் தன்வந்திரியே ஆரோக்ய சித்திம் ஹ்ரீம் நமஹ||


2.ரோக நிவாரண ஸ்ரீ காளி மந்திரம் :-

இடது கரத்தில் ஒரு செம்பில் நீர் வைத்து ''க்ரீம்'' என்று 7 தடவை ஜெபித்து ஸ்ரீ காளிமாதாவை வேண்டி அந்த நீரை அருந்தி வர மேற்கண்ட பலன் உண்டாகும்.


வாழ்க வையகம்||  வாழ்கவளமுடன்||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072/ 9788493072
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment