Monday 28 May 2018

ஆரோக்கியம் தரும் யந்திரம்

                            யந்திரத்தில் வரைய வேண்டிய பீஜ மந்திரம்  



நோய்களை நீக்கி ஆரோக்யம் தரும் இந்த யந்திரத்தைக் கீழ்க்கண்ட இரண்டு முறைகளில் எது உங்களுக்கு எளிமையானதோ அதைப் பின்பற்றிச் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.

முறை 1:

ஒரு வெள்ளை பேப்பரில் பச்சை நிற மை பேனாவால் மேலே உள்ள  பீஜ மந்திரத்தை  9 தடவை எழுதவும்.எழுதிய பின் அந்த பேப்பரை ஒரு சுத்தமான  மரப்பலகையில் வைத்து அதற்கு ஊதுவத்தி காண்பித்து அதன்முன் ஒரு தீபம் ஏற்றி வைக்கவும்.ஊதுவத்தியும் தீபமும் அணைந்த பின் அந்த பேப்பரை எடுத்து ஒரு தாயத்தில் அடைத்து வலது கை புஜத்தில் அணிந்து கொள்ளவும்.
   

முறை 2: 

 ஒரு வெள்ளை பேப்பரில் பச்சை நிற மை பேனாவால் மேலே உள்ள  பீஜ மந்திரத்தை 11 தடவை எழுதவும்.மேலே கண்ட முறைப்படி பூஜித்து கழுத்தில் கட்டிக் கொள்ளளவும்.


குறிப்பு :-   இந்தத் தாயத்தை வடக்கு பார்த்த படி அமர்ந்து வரைந்து 1008 தடவை டம் (TAM)  என்ற பீஜ மந்திரத்தை ஜெபித்த பின் யந்திரத்தைப் 
பூக்களால் அர்ச்சிக்கவும்.

வடக்கு பார்த்து  அமர்ந்து தினமும் குறைந்தது 108 தடவை  டம் (TAM)  என்ற பீஜ மந்திரத்தை ஜெபித்து வர நிறைவான பலன் கிடைக்கும்.


இந்தத் தாயத்து அணிவதால் பல நோய்கள் குணமாகும் என்றாலும் கீழே  
குறிப்பிட்ட சில நோய்களை விரைவாக நீக்கும் :-

1.நினைவாற்றல் குறைவு
2.கை,கால் இணைப்புகளில் உள்ள வலி மரத்துப் போதல்,தசை வலி 
3.மன அழுத்தம்
4.பயங்கரமான கனவுகள் அதனால் தூக்கமின்மை
5. மூக்கில் ரத்தம் வடிதல்
6.தாய்ப்பால் சுரப்புக் குறைவு
7.குழந்தைகளின் தொடர் அழுகை


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி 
Mobile: 9442193072
Whatsapp/  Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook ID : Surya Guru


No comments:

Post a Comment