Friday 12 July 2013

ஞாபகசக்தி,வாக்குவன்மை ஏற்பட மந்திரம்

1.ஞாபகசக்தி,வாக்குவன்மை ஏற்பட மந்திரம்:

நம்மில் பலரும் அனேக விஷயங்கள்,நூல்களை படிக்கிறோம் ஆனால் மிகச்சிலரே படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்கிறோம்.கீழ்க்கண்ட மந்திரங்களை ஜெபித்து வருவதின் மூலம் நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.

சரஸ்வதி மால் மந்திரம் :-

ஓம்|ஆம்| ஐம் சரஸ்வதி|க்லீம் சரஸ்வதி|சௌம் சரஸ்வதி|
வேணுகாணி |வித்யாவதி |பாலமோகினி|பக்தரட்சகி|
வித்தக சக்தி|வேதபூஷணி |
உருவாய் அருவாய் உள்ளே இரு இரு|
சிந்தையில் நின்று செந்தமிழ் ஓது|
மனதில் இருந்து மாமறை ஓது |
கருத்தில் இருந்து கலை பல ஓது|
நாவில் இருந்து நானே நீயாய்
சொல்லும் பொருளாய் வல்லியே வா வா|
சொல்லால் உலகம் எல்லாம் வணங்க|
நில்லு நில்லு என் நினைவினில் நில்லு|
வெல்லு வெல்லு வல்லோர் வணங்க|
மானமும் கல்வியும் மோனமும் தா தா |
அஷ்டலக்ஷ்மியும் அடியேனைக் காக்க|
இஷ்ட சக்தியாய் இருந்து நீ காக்க|
வா வா தேவி வரம் தர வா வா|
காவாய் காவாய் கடாட்சம் குரு குரு||

இதனை தினமும் 3 அல்லது 11 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.

2.சரஸ்வதி மந்திரம்|

ஓம்| ஐம்|வத வத வாக்வாதினி நமஹ| 

(அல்லது)

ஓம்|ஐம் க்லீம் சௌம் வத வத வாக்வாதினி நமஹ|

இதனை தினமும் குறைந்தது 27 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

No comments:

Post a Comment