Wednesday 3 July 2013

மந்திர ஜபம் :1

மந்திர ஜபம் :1

 51 பிரதான கணபதி மந்திரங்கள் இருக்கின்றன அவற்றில் சில பயனுள்ள பிரயோகங்களை காணலாம்.

1.தருண கணபதி :-

ஓம் |ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கம்| நமோ பகவதே நித்ய யௌவனாய |யுவதி ஜன சமா ச்லிஷ்டாய |கணபதயே நமஹ ஸ்வாஹா||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வியாதிகள் யாவும் நீங்கும்.

2.புத்தி கணபதி

ஓம் |ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர வாக்குவன்மை ,கல்விகேள்விகளில் சிறந்து விளங்குதல் உண்டாகும்.குழந்தைகளுக்கு வித்யாரம்பத்தில் (பள்ளிக்கு அனுப்பும் சமயம்) தேனில் ஜெபித்து நாவில் தடவ நல்ல படிப்பும் ,வாக்குவன்மையும் உண்டாகும்.எழுத்துப்பணி,ரெப்ரசெண்டேடிவ்,ஜோதிடர் போன்ற  வாக்கு        சாதுர்யம் தேவைப்படும் துறையில் உள்ளோர் ஜெபிக்க சிறந்து விளங்கலாம்.


3.சந்தான கணபதி:-

ஓம் |நமோ லக்ஷ்மி கணேசாய |மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர புத்திர பாக்கியம் உண்டாகும்.வெண்ணையில் ஜெபித்து தம்பதிகள் உண்டு வர விரைவில் குழந்தைபாக்கியம் உண்டாகும்.கீழ்க்கண்ட மந்திரமும் இதே பலன் தரும்.

4.திருதாரி சந்தான கணபதி:

ஓம் \ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்\ஓம் |நமோ லக்ஷ்மி கணேசாய |மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா ||


5.துர்கா கணபதி:-

ஓம்|ஹ்ரீம் கம் ஹ்ரீம்|தும் துர்கா புத்ராய|சக்தி ஹஸ்தாய ,மாத்ருவத்சலாய |
மகாகணபதயே நமஹ||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து ஜெபித்து வர துன்பங்கள் நீங்கும்.விளக்கில் துர்க்கையையும்,கணபதியையும் ஆவாஹனம் செய்து மாதுளம்பழம்,அவல் ,பொரி,கடலை,வெற்றிலை,பழம்,பாக்கு வைத்து விளக்கின் பாதத்தில் குங்குமம் போட்டு ஜெபித்து அந்த குங்குமத்தை இட்டு வர துன்பங்கள் விரைவில் நீங்கும்.


வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

No comments:

Post a Comment