Wednesday 31 July 2013

குழந்தைப்பேறு அருளும் மந்திரம் 1

குழந்தைப்பேறு அருளும் மந்திரம் 




16 செல்வங்களுள் குழந்தைபேறு சிறந்த செல்வமாக கருதப்படுகிறது.குழந்தைப்பேறு  இல்லாதவர்கள் படும் மனக்கவலை சொல்ல முடியாதது அதற்கு வெறுமனே ஆறுதல் மட்டும் சொல்லி ஆற்றமுடியாது. எனக்குத்  தெரிய பல மந்திர ஜெபம்,பிரயோகம் இருப்பினும் அவற்றில் எளிய முறைகளை இங்கு பதிகிறேன்.


1.கிருஷ்ண மந்திரம்:-

ஓம்| க்லீம் கிருஷ்ணாய |கோவிந்தாய| கோபிஜன வல்லபாய ஸ்வாஹா ||

இம்மந்திரத்திற்கு   ரிஷி நாரதர்  அவரை மந்திரம் பலிக்க வேண்டிக்கொண்டு  பின் ஜெபிக்கவும்.இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து தொடர்ந்து ஜெபித்து வர   விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வைத்து ஜெபிக்க சிறப்பு.ஜெபிக்கும் போது அருகில் கொஞ்சம் வெண்ணை வைத்து மந்திரம் ஜெபித்தபின் மந்திரத்தின் சக்தி   இந்த வெண்ணையில் இறங்கட்டும் என வேண்டி அந்த வெண்ணையை சாப்பிட்டு வர  மந்திரத்தின் சக்தியைக்  கூட்டும்.


2.கிருஷ்ண மந்திரம்: 

தேவகி சுத கோவிந்த வாசுதேவ ஜகத்பதே |
தேஹிமே தனயம் கிருஷ்ண த்வாமஹம் சரணம் கத:|
தேவ தேவ ஜகன்னாத கோத்ர வ்ருத்திகரப்ரபோ|
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ் மந்தம் யசஸ்விஸ்நம்||

இதனை 27/54/108 என்ற எண்ணிக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்து  தொடர்ந்து  ஜெபித்து வர  விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும்.அம்மன் அல்லது பெருமாள் கோயிலில் வைத்து ஜெபிக்க சிறப்பு.ஜெபிக்கும் போது அருகில் கொஞ்சம் வெண்ணை வைத்து மந்திரம் ஜெபித்தபின் மந்திரத்தின் சக்தி   இந்த வெண்ணையில் இறங்கட்டும் என வேண்டி அந்த வெண்ணையை சாப்பிட்டு வர மந்திரத்தின் சக்தியைக்  கூட்டும்.

3.கிருஷ்ண மந்திரம்: 

இந்திரா நீல  சமயச்சாயம் பீதாம்பரதரம் ஹரிம் |
சங்க: சக்ர:கதாபத்மை :லசத்பாஹு விசிந்தயேத்|| 

இதனை ஒரு தேய்பிறை அஷ்டமியில் இருந்து மறு தேய்பிறை அஷ்டமி வரை 1 மாதம் தினம் 8 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து  ஜெபித்து   வர   விரைவில்  குழந்தை பாக்கியம் கிட்டும்.இம்மந்திரம் குழந்தை பாக்கியம் மட்டுமின்றி எண்ணிய எண்ணங்களையும் நிறைவேற்றும்.





வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
மொபைல் : 9442193072
வாட்ஸ் அப் எண் WHATSAPP NO : 9788493072

No comments:

Post a Comment