Saturday 9 August 2014

ஸ்ரீ பரசுராமர் மந்திரம்


ஓம் ராம் ராம் | ஓம் ராம் ராம் | ஓம் பரசு ஹஸ்தாய நமஹ||

ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று இந்த மந்திரத்தை விஷ்ணு ஆலயத்தில் வைத்து 108 முறை தெற்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.பின்னர் வீட்டில் வைத்து ஜெபிக்கலாம்.

இந்த மந்திரம் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் ,நில அபகரிப்பு பிரச்சனை ,வறுமை ,தவறான தொடர்பு இவற்றில் இருந்து விடுதலை தரும்.


விற்க முடியாமல் இருக்கும் வீடுகள்,இடங்கள் விற்க:-

ஒரு செம்புப் பாத்திரத்தில்  நீர் நிரப்பி சில துளசி இலை,கொஞ்சம் வெண்ணிறமான பூக்களைப் போட்டு செவ்வாய்க்கிழமை அன்று கிழக்கு முகமாய் அமர்ந்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜெபித்து  ஜெபத்தின் சக்தி அந்த செம்புப் பாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தில் இறங்கட்டும் எனக் கூறி அந்த தீர்த்தத்தை அடுத்த நாள் (புதன்கிழமை ) அதிகாலை 6 மணிமுதல் 7 மணிக்குள் விற்காத இடத்தின் வடகிழக்கு மூலையில்  (ஈசான்யமூலை) சிறிய குழி பறித்து அதில் ஊற்றி விடவும்.விரைவில் விற்பனை ஆகிவிடும்.

வீட்டில் ,தொழில் செய்யும் இடங்களில் உள்ள தீய சக்திகளால் உண்டான பாதிப்புகள் நீங்க:-

ஒரு செம்புப் பாத்திரத்தில்  நீர் நிரப்பி சில துளசி இலை,கொஞ்சம் வெண்ணிறமான பூக்களைப் போட்டு செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் கிழக்கு முகமாய் அமர்ந்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜெபித்து  ஜெபத்தின் சக்தி அந்த செம்புப் பாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தில் இறங்கட்டும் எனக் கூறி அந்த தீர்த்தத்தை வலம்புரிச்சங்கில் ஊற்றிச் செவ்வாய்க்கிழமை இரவு 8 முதல் 9 மணிக்குள் பாதிப்படைந்த வீடு, கடை, தொழிற்சாலைகளில் தெளித்து விடத் தீமைகள் நீங்கும் இதை மாதம் ஒரு முறையேனும் வளர்பிறை செவ்வாய்க்கிழமை  அன்று செய்து வர திருஷ்டி மற்றும் எந்த தீய சக்திகளாலும் உண்டான பாதிப்புகள் நீங்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


No comments:

Post a Comment