Saturday 30 August 2014

சகல கார்ய சித்திக்கு அதிர்ஷ்ட நேரம்,அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்





மனிதர்கள் யாவருமே தொடர்ந்த வெற்றியையும் சந்தோஷத்தையும் விரும்புபவர்களே. ஆனாலும்,நாம் விரும்பும் வகையில் வாழ்க்கை இருப்பதில்லை .
கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றி வெற்றிகரமான வளமான வாழ்வு வாழலாம்.


1.பஞ்சபட்சி சாஸ்திரம் -அதிர்ஷ்ட நேரங்கள்,நாட்கள்,நிறங்கள்,திசை.
                                               தவிர்க்க வேண்டிய நேரங்கள்,நாட்கள்,நிறங்கள்,திசை.
                                               ஜெபிக்க வேண்டிய  பஞ்சாட்சர மந்திரம்.

2. திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு 

3. அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்



1.பஞ்சபட்சி சாஸ்திரம்

ஒரு காரியத்தை நல்ல நாள், நட்சத்திரம், திதி ,யோகம் ,கரணம்  எல்லாம் பார்த்துச் செய்தாலும் அது சரிவர நடைபெறாமலோ  வெற்றி அடையாமலோ போகலாம்.ஆனால் ,பஞ்சபட்சி சாஸ்திரப்படி நமக்கு உரிய அதிர்ஷ்ட நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் தோல்வியடையாது.மேலும் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களில் நமக்கு அதிர்ஷ்ட நேரம்,அதிர்ஷ்ட நிறம்,அதிர்ஷ்ட திசை நோக்கி மந்திர ஜபம்,தொழில் சார்ந்த பேச்சுவார்த்தை,சுபகார்யம் சத்ருஜெயம் சார்ந்த காரியங்கள் செய்ய யாவும் பின்னமின்றி வெற்றி பெறும்.
மேலும்  தவிர்க்கவேண்டிய நிறங்கள் ,நேரங்கள்,படுபட்சி நாட்கள் இவற்றை அறிந்து சுப காரியங்கள் செய்வதை விலக்க வேண்டும்.
என் நண்பரின் சகோதரிக்கு நல்ல நாள்,நட்சத்திரம்,நேரம் பஞ்சபக்ஷி சாஸ்திரப்படி படுபட்சி இல்லாத நாளாகப்  பார்த்து திருமணம் நடந்தும் மணப்பெண் எதிரிப் பட்சிக்கு  (தவிர்க்கவேண்டிய) உண்டான நிறத்தில் பட்டுச்சேலை கட்டி இருந்ததால் திருமண வாழ்க்கை முறிந்தது.

பணம்,ஆள் பழக்கம் இருந்தும் ஒரு கார்,வீடு வாங்க நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் முடியவில்லை ,நீண்ட நாட்களாக கோர்ட் கேஸ் இருந்து முடிவாகாமல் உள்ளது, தொழில் சார்ந்தும் தீய சக்திகளைக் கொண்டும்  எதிரிகளால் பல தொல்லைகள் இது போன்ற பல முடியாத காரியங்களை  பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நமது அதிர்ஷ்ட நாள்,நேரத்தில் செயல்பட்டுத் தீர்வு காணலாம். 


2. திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு 

ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அடையும்  அந்த வீட்டிற்கான பலன்கள் திருப்திகரமாக சரிவர அமையாது.உதாரணமாக 7ஆம் வீடு திதி சூன்யம் அடைந்தால் ,நல்ல படிப்பு,வீடு,அழகு  எல்லாம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன் மனைவி அமையாது  கஷ்டம் ஏற்படும்.தொழில் சார்ந்த பார்ட்னர்கள் சரிவர அமையாமல் ஏமாற்றப்படலாம். இப்படி,எந்த வீடு நம் ஜாதகத்தில் சூன்யம் அடைகிறதோ அதன் பலன் நமக்குப்  பூரணமாகக்  கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த திதியில் சூன்யம் அடையும் கிரகங்களால் உண்டாகும் தீமைகளில்  இருந்து திதி சூன்ய பரிகாரம் என்று சொல்லப்படும் அந்தந்தத் திதிகளுக்குண்டான  திதி நித்யா தேவதைகளை வழிபட்டு வருவதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பாவத்திற்கான கிரகங்கள் செயல்படத் தொடங்கி நலம் தரும்.


3. அதிர்ஷ்ட தெய்வ வழிபாட்டு முறைகள்

பல பிறவிகளில் நாம் செய்த புண்ணிய பாவங்களின் தொகுப்பின் பெயர் சஞ்சிதகர்மா. இந்தப் பிறவியில் அனுபவிக்கும் கர்மாக்களுக்குப் பெயர் ப்ராரப்த கர்மா. இதில் நாம் இந்த ஜன்மத்தில் நமக்கு வரவேண்டிய நன்மைகள் நிறைவாகவும் விரைவாகவும் வரவும், தீமைகள்  மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தாமல்  இருக்கவும் எந்த  தெய்வத்தை வழிபடலாம்.நடப்பு தசா புத்தியில் மற்றும் தற்சமயம் உள்ள பிரச்சனைகள் தீரவும் எந்த தெய்வங்களை வழிபடலாம் அந்த தெய்வங்களின் உபாசனை,தீக்ஷை ,பூஜை,வழிபாட்டு முறைகள் பற்றி விளக்கமாக அறிய .குழந்தைகள் கல்வியில் உயர்வடைய ,பல நற்காரியங்களுக்குத் தெய்வங்களின் யந்திரங்கள், ரக்ஷைகளின் மூலம்  பலன் பெறும் முறைகள்.

உங்கள்  பிறந்தநாள் ,நட்சத்திரம்,நேரம் அல்லது ஜாதகம் அனுப்பி ஜாதகத்தின் மூலம் நமக்கான அம்சங்களை ஆராய்ந்து மேற்கண்ட ஆன்மீக வழிமுறைகளின் மூலம் உங்கள் அதிர்ஷ்ட நேரங்களின்  அட்டவணை ,படுபட்சி நாட்கள் ,பலமான நாட்கள்,திதி சூன்யப் பரிகார தேவதை,அதிர்ஷ்ட தெய்வங்களின் வழிபாட்டுமுறைகள் அறிந்து நலமும்,வளமும் பெறுவீர்களாக.


விவரங்களை கீழ்க்கண்ட மெயில் ஐடிக்கு மெயில் செய்யவும்.
ms.spiritual1@gmail.com

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல்  எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

9442193072
9788493072    
     
                  வாழ்க வையகம் ||                         வாழ்க வளமுடன் ||



M.சூர்யா,திருநெல்வேலி 
9442193072  / 9788493072         

ms.spiritual1@gmail.com



No comments:

Post a Comment