Monday 11 December 2017

சர்வ கார்ய சித்தி மந்திரம்




ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ப்லூம் ஐம் நம ஸ்வாஹா 



கிரஹணம் அன்றோ அல்லது ஒரு சுபமான திதியுடன் கூடிய  நாளில் இம்மந்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து 12,500 எண்ணிக்கை ஜெபிக்க வேண்டும்.

12,500 ஜெபத்தில் இம்மந்திரம் சித்தியாகி விடும்.


அதன் பின் மந்திரத்தைக் கீழ்க்கண்ட பிரயோகங்களுக்குப்  பயன்படுத்தலாம். 



1.எதிரிகள் தொல்லை நீங்கி நண்பனாக மாற


உங்கள் எதிரியின் முகத்தை நினைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 7 தடவை ஜெபித்து வலது கையால் முகத்தை லேசாகத் தடவவும்.இதைச்  செய்து வர நமக்குத் தொல்லை தருபவர்கள் கூட மெல்ல மெல்ல  நம்  நண்பர்களாக மாறிவிடுவார்கள்.    

வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் அல்லது அதிகாரிகளால் பிரச்னைகளைச் சந்தித்து வருபவர்களும் ஜெபிக்கலாம்.



2.காரியத்தடைகள் நீங்க 

முக்கியமான வேலைகளில் ஈடுபடும் முன் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின்னர் செயலில் இறங்க, காரியத் தடைகள் நீங்கும்.


3.வழக்குகளில் வெற்றி உண்டாக 

கோர்ட் கேஸ்,வாய்தா மற்றும் வழக்கு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் பொழுது இம்மந்திரத்தை 21 தடவை ஜெபித்த பின் ஈடுபட வெற்றி உண்டாகும்.



4.வெளியூர்ப் பயணம் சிறப்பாக அமைய

தொழில்,பணம் தொடர்பாக  வெளியூர்,வெளிமாநிலம் செல்பவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும் முன் குளித்து முடித்து, அந்த ஊரின்  அருகில் உள்ள ஏதேனும் குளம்,ஏரி,ஆறு,கடல் இவற்றில் ஒன்றின் அருகில் அமர்ந்து  அல்லது நின்று 108 தடவை ஜெபித்த பின் திட்டமிட்ட நபர் அல்லது இடத்திற்குச் செல்ல சிறப்பான மரியாதையும்,தொழில் சம்பந்தமான விஷயங்களில் வெற்றியும்,உயர்வும் உண்டாகும்.



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com  

No comments:

Post a Comment