Tuesday 19 December 2017

அதிர்ஷ்டம்,அழகு,மன அமைதி தரும் வெள்ளி மோதிரம்


வலது கையின் சுண்டு விரலில் வெள்ளி அணிவதன் மூலம் பல நல்ல பலன்களைப் பெறலாம்.


1.ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஹோரையில் வெள்ளி மோதிரம் வாங்கி சந்தனமும் பன்னீரும் கலந்த நீரில் கழுவி உங்கள் இஷ்ட தெய்வம், சாந்தமான அம்மன் அல்லது மஹாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்த பின் அணிந்து கொள்ளவும்.

2.மோதிரத்தில் ஸ்ரீம் என்ற மந்திரம் பதித்து அணிந்து கொள்ள செல்வ நிலையில் உயர்வு கிடைக்கும்.


3.தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவும்,தொழில்,வியாபாரம்,மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், க்லீம் என்ற மந்திரம் பதித்து மோதிரம் அணியலாம்.

4.வாழ்வில் செல்வ வளமும்,அதிர்ஷ்டமும் பெருகும்.

5.அழகும்,மன அமைதியும் உண்டாகும்.

6.கபம் என்று சொல்லப்படும் நீர் பூதத்தினால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

7.உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.


8.கோபத்தைக் குறைத்து,வசீகர சக்தியை அதிகரிக்கும்.

9.மூட்டு வலி,மனநிலை பாதிப்பு,மனக்குழப்பம்,தொடர் சளித் தொந்தரவு, மற்றும் ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.   

10.மோதிரம் அணிய விரும்பாதவர்கள் கழுத்தில் வெள்ளி செயின் அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com



No comments:

Post a Comment