Tuesday 13 January 2015

ஸ்ரீ ஸ்வப்ன காளி மந்திரம்




ஞாயிற்றுக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணிக்கு மேல் பூஜையைத் தொடங்கவும்.தாமரைத்தண்டுத் திரி போட்டு விளக்கேற்றி வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பூக்கள்,குங்குமம் படைத்துக் கரும்புள்ளி   இல்லாத ஒரு எலுமிச்சம்பழத்தை நாலு துண்டுகளாக நறுக்கி அதில் குங்குமம் தடவி விளக்கின் முன் வைத்து மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்.முதல் நாளும் 21 வது நாளும் சிறப்பாகப் பூஜை செய்து பாயசம் படைக்கவும்.தினமும் 351 தடவை 21 நாட்களுக்குத் தொடர்ந்து ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் நம் மனதில் தோன்றும் குழப்பங்கள் மற்றும் எந்தக் கேள்விக்கும் உறங்கும் முன்னர் ஊதுபத்தி ஏற்றி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்துக் காளிதேவியை வேண்டி உறங்கக் கனவில் நம் கேள்விக்கான விடை கிடைக்கும்.

குறிப்பு:-
முதல் நாள் மந்திரம் ஜெபிக்கும் முன் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்து ரக்ஷை அணிந்து கொண்டு ஜெபம் தொடங்கவும்.
ஓம் க்ரீம் பத்ரகாள்யை ஏஹிஏஹி மகாதேவி பாதுகாப்யம் தயாநிதே || என்று 7 தடவை ஜெபித்து ஒரு கறுப்புக் கயிற்றில் 7 முடிச்சுப் போட்டு அதை வலது கையில் கட்டிக் கொள்ளவும்.


ஸ்ரீ ஸ்வப்ன காளி மந்திரம் 

காளி தேவி நமஸ்துப்யம் சர்வ காமார்த்த சாதிகே |
மம சித்தமசித்தம் வா  ஸ்வப்னே சர்வ ப்ரதர்ஷய ||



                                     வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment