Sunday 25 January 2015

திருட்டு பயம் நீக்கும் ஸ்ரீ காளிதேவி மந்திரம்

பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மந்திரத்தைப் பதிவு செய்கிறேன்.அனேக இடங்களில் பொருட்கள் திருடு போகின்றன, மேலும் திருடர்கள் அதன் உரிமையாளர்களையும் கொலை செய்து விடுகின்றனர். பெண்கள் இரவில் தனியே வீட்டில் தங்க நேரிட்டால் நிச்சயம் பயத்துடனே உறங்க வேண்டிவரும்.எவராலும் வீட்டில்,அலுவகத்தில் திருட்டு நேராது தடுக்கும் மந்திரபிரயோகம் கீழே தரப்பட்டுள்ளது.செய்து பலன் பெறுங்கள்.

செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை காலையில் 6 முதல் 7 மணிக்குள் 12 மிளகு எடுத்துக்கொண்டு  தென்மேற்கு மூலையிலிருந்து வீட்டை வலமிருந்து இடமாக 3 தடவை சுற்றி வரவும் ஒவ்வொரு சுற்றிலும் ஒரு மிளகை வீட்டின் ஒவ்வொரு மூலையில் போட்டு விட்டுச் சுற்றவும்.
வீட்டைச் சுற்றும் பொழுது கீழே உள்ள மந்திரம் ஜெபித்தபடி சுற்றவும்.
இந்தப் பிரயோகத்தைச்  செய்யும் முன் விளக்கேற்றி வெற்றிலை,பாக்கு,பால், பழங்கள்,பாயசம்,எலுமிச்சம்பழம் படைத்து ஸ்ரீ காளிமாதாவை வேண்டி பூஜை செய்யவும்.

மந்திரம் :-

ஓம் கராலினி ஸ்வாஹா |
ஓம் கபாலினி ஸ்வாஹா |
ஹ்ரௌம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் |
சோர பந்தக ட்டஹ ட்டஹ ||            



வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

M.சூர்யா ,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment