Thursday 16 April 2015

அழகு,செல்வம்,நற்குணம் நிறைந்த கணவன் கிடைக்க ஸ்ரீ ருக்மிணீ மந்திரம்

ஸ்ரீ ருக்மிணீ தேவி மந்திரம் 

ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா 

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது பெருமாள் கோயில் சென்று மேற்கு நோக்கி அமர்ந்து நற்குணம்,செல்வம்,அழகும் நிறைந்த கணவன் கிடைக்க அருள் செய் என்று ஸ்ரீ கிருஷ்ணனோடு சேர்ந்த ருக்மிணீ தேவியை மனதார வேண்டிய பின் மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.

பின் வரும் நாட்களில் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ ஜெபித்து வரலாம்.

வீட்டில் ஜெபிப்பதானால் நெய் விளக்கேற்றி அந்தத் தீப ஒளியில் ஸ்ரீ ருக்மிணீ சமேத ஸ்ரீ கிருஷ்ணரை எழுந்தருள வேண்டிப் பின்  ஜெபிக்கவும்.இயன்றதைப் படைத்து ஜபம் முடிந்த பின் விளக்கின் கருக்கை வகிடு அல்லது நெற்றியில் இட்டு  வர விரைவில் நல்ல இடத்தில் திருணம் நடைபெறும்.




வாழ்கவளமுடன்  

M.சூர்யா - தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

No comments:

Post a Comment