Thursday 23 April 2015

பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திர சுலோகம்



ஸ்ரீ காயத்ரி மந்திர சுலோகம் :-

சாவித்திரி வேதமாதாச காயத்ரி ச சரஸ்வதி |
சாங்க்ரிதீ பிராம்மணி சாத்வீ  சதாசர்வ அர்த்த சாதினீ |
சஹஸ்ராக்ஷீதி நாமானி ஜபாத் பாப ஹராணிச ||



இம்மந்திர சுலோகம் ஸ்ரீ கருட புராணத்தில் உள்ளது.இதை ஜெபித்து வர பாபங்கள் விலகும்.குளிக்கும் முன் குளிக்கப் பயன்படுத்தும் நீரில் வலது கையின் நடு மூன்று விரல்களை வைத்து இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து  பின் குளித்து வர பாவ வினைகளால் வரும் துன்பங்கள் குறைந்து நிம்மதி உண்டாகும்.இறை வழிபாட்டின் பொழுது இடது கரத்தில் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் கொஞ்சம் தெளித்துக் கொண்டு  கொஞ்சம் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment