Monday 11 July 2016

வாழ்வில் உயர்வான நிலை அருளும் ஸ்ரீ துர்கா மந்திரம்



இது தந்திர சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ துர்கா ஆவாஹன மந்திரம்.இம்மந்திரம்  எளிமையாக இருந்தாலும்  உங்கள் வாழ்வில் ஸ்ரீ துர்கா மாதாவின் அருளை ஆகர்ஷித்து வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்க உதவக்கூடியது.

பூஜா விதிகள் :


இம்மந்திர ஜெபத்தை நவராத்திரியில் ஆரம்பித்து நவராத்திரி காலமான 9 நாட்களுக்கும் செய்யவேண்டும்..

துர்கா தேவியின் படம் வைத்து அதன் முன் விளக்கேற்றி ஊதுவத்தி ஏற்றி வைக்கவும்.

மஞ்சள் நிற ஆடை அணியவும்.

வடக்கு நோக்கி அமர்ந்து  ருத்ராக்ஷம் அல்லது ஸ்படிக மாலையால் காலையிலும் இரவிலும் 540 தடவைகள் ஜெபிக்க வேண்டும். (108*5=540).

பழங்கள் ,இனிப்பு வகைகள் நைவேத்யம் செய்யவும்.

ஜபம்,பூஜை முடிந்த பின் பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கவும்.

பூஜா காலங்களில் ஏற்படும் ஆன்மீக அனுபவங்களை  யாரிடமும் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.அது நிறைவான பலனை குறைக்கும்.



மந்திரம் 


ஓம் ஹ்ரீம் பகவதி ஆகச்ச ஓம் நமஹா 



வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment