Thursday 7 July 2016

லக்ஷ்மி கடாட்சம் பெறத் தாந்த்ரீக ரகசியங்கள்




1.வீட்டில் உள்ள பெண்களை மரியாதையுடன் நடத்தவும்.பெண்களுடன் மரியாதையுடன் பழகவும்.

2.வீட்டில் மண் அகல் விளக்கு ஏற்றி நல்லெண்ணெய் ஊற்றித்  தீபம்  ஏற்றவும். அந்தத் தீபத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை  எழுந்தருளுமாறு வேண்டவும். இதனால் லக்ஷ்மி மகிழ்ச்சி அடைவாள்.

3.சூரியன் மறையும் வேளையில் வீட்டைப் பெருக்கக் கூடாது.

4.ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்க்கவோ ,தேய்த்துக் கழுவவோ கூடாது.

5.ப்ரஹ்ம முஹூர்த்த  நேரத்தில் எழுந்து குளித்து விட வேண்டும்.சோப் பயன்படுத்தக் கூடாது.

6.முடிந்தவரை தான,தருமங்கள் செய்து வரவும்.குறிப்பாக வெள்ளிக்கிழமை மட்டுமாவது செய்வது நல்லது.

7.வீடு மற்றும் கடைகளில் நடராஜர்,மலைகள்,ஆறு,குளம் போன்ற படங்கள் வைத்தால் பணம் வரும் ,போகும் தங்காது.

8.செவ்வாய் தசை நடப்பில் உள்ளவர்கள் இனிப்பு வாங்கி லக்ஷ்மிக்குப் படைத்து உண்ணுவதும், ஸ்வீட்ஸ் தானம் செய்வதும் லக்ஷ்மி கடாட்சத்தைப் பெருக்கும்.

9.சந்திர தசை நடப்பில் உள்ளவர்கள் பாலைக் காய்ச்சாமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ள வேறு யாரேனும் ஒருவரை பால் காய்ச்ச சொல்லவும். இது தரித்திரத்தை ஏற்படுத்தும்.

10.கரித்துண்டுகளை  வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். கரித்துண்டுகளின் அருகில் வைக்கப்பட்ட பொருள் எதுவானாலும் 4 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பயனற்றுப் போகும்.இது லட்சுமியை வெளியேற்றும்.

11.கூர்மையான பொருட்களை  அன்பளிப்பாகக் கொடுக்கக் கூடாது.


வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment