Friday 12 September 2014

ஸ்ரீ ஹனுமத் சத்ரு ஜெய மந்திரம்


ஓம் நமோ பகவதே |
மஹாபலபராக்ரமாய |
மஹா விபத்தி நிவாரனாய |
பக்த ஜன மனோபீஷ்ட கல்பனா கல்பத்ருமாய |
துஷ்ட ஜன மனோரத ஸ்தம்பனாய| 
பிரபஞ்சன ப்ராணப்ரியாய ஸ்ரீம்||


ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று  ஒரு செம்புப் பாத்திரத்தில் நீர் வைத்துக் கொண்டு கொய்யாப்பழம் ,வெற்றிலை பாக்கு ,பால்,பழங்கள் படைத்து இந்த மந்திரத்தை 1008 தடவை ஜெபிக்கவும். துளசிச் செடியின் வடக்கு பக்கம் வேரும் 3 வெற்றிலையும் சேர்த்து சிகப்பு நூலால் கட்டி செம்பில் உள்ள நீரால் கழுவி  ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீட்டு வாசலில் தொங்க விடவும்.மீதி நீரை வீடு முழுவதும் வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து விடவும்.

இந்த மந்திரப்பிரயோகத்தைச் செய்தால் நமது மன விருப்பங்கள் நிறைவேறும்.எதிரிகளால் ஏற்படும் தீவினைகள் பலிக்காமல் நீங்கும்.பேய் ,பிசாசு மற்றும் தீய சக்திகள் வீட்டை அண்டாது.

இந்த மந்திரத்தை ஒரு செம்பு யந்திரத்தில் எழுதி பன்னீர்,பால்,பச்சைக் கற்பூரம் கரைத்த தீர்த்தம்  மற்றும் பஞ்சகவ்யத்தால் அதைச் சுத்தி செய்து 1008  உரு மந்திரம் ஜெபித்துப் ப்ராண ப்ரதிஷ்டை செய்து  புஷ்ப அர்ச்சனை செய்து தாயத்தில் அடைத்து அதை வாகனத்தில் தொங்க விட விபத்துகளில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
உடலில் அணிந்து கொண்டால் எதிரிகளின் தீவினைகளாலோ தீய சக்திகளாலோ ஆபத்து நேராமல் காக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com






No comments:

Post a Comment