Monday 22 September 2014

ஸ்ரீ சரஸ்வதி தேவி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரம்






குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ,எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில் விளங்கிக்கொள்ளவும் ,விளக்கிச்சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும்  ஸ்ரீ சரஸ்வதி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்கள் மற்றும் உபாசனை முறைகள் .

பகவான் ஸ்ரீ ஹயக்ரீவர் வேத ஸ்வரூபி .அவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி.எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச்  சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


ஸ்ரீ ஹயக்ரீவர்,ஸ்ரீ சரஸ்வதி தேவியின் மந்திரங்கள் ,ஜெபிக்கும் முறைகள்,வாக்குவன்மை கல்வியில் மேன்மை பெற உதவும் சிலப் பிரயோக முறைகளும் கற்றுத்தரவிருக்கிறோம். 


சரஸ்வதி பீஜ மந்த்ரம்       - ஐம் 
ஹயக்ரீவர் பீஜ மந்த்ரம் - ஹ்ரஸௌம் 

நினைவாற்றல் கூட படிப்பில் விருப்பம் ஏற்பட :-

செம்புப் பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் பன்னீர் கலந்து,சிறிய துண்டு பச்சைக்  கற்பூரம்  போட்டுப் பாத்திரத்தில் வெண்தாமரையை  இதழ் விரித்து வைத்து ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவரின் பீஜ மந்திரம் ஜெபிக்கப்பட்ட தீர்த்தத்தைப் பச்சை நிறப் போர்வை அல்லது துண்டில் தெளித்து அதில் அமர்ந்து படித்து வர நினைவாற்றல் அதிகரிப்பதோடு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். மந்தமான புத்தி படைத்த குழந்தைகள் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் பெறுவார்கள்.

புதன்கிழமை மற்றும் பௌர்ணமிகளில் இதைச் செய்து வர நிறைவான தொடர்ந்த பலனைப் பெறலாம்.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள்,கலைஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்களும் இதைச் செய்து  வியக்கத்தக்க பலன்களைப்  பெறலாம்.இது அனுபவ உண்மை.

மேலும் ஒரு பிரயோகம் 

புதன்கிழமைகளில் கிழக்கு நோக்கி அமர்ந்து சரஸ்வதிக்கு பூஜை செய்யும் போதோ அல்லது பூஜை முடிந்த பிறகோ  ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் சுத்தமான தேன் விட்டு அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதிப் பின்னர் வாக்வாதினி மந்திரம் குறைந்தது  27 தடவையாவது ஜெபித்து அந்தத் தேனைச்  சாப்பிட மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்கள் என்று யாவருக்கும் நல்ல வாக்கு வன்மையும்,கல்வி,கலைகளில் தேர்ச்சியும் உண்டாகும்.

வாழ்க வையகம் ||   வாழ்கவளமுடன் ||

M.சூர்யா,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


    

No comments:

Post a Comment