Tuesday 9 December 2014

நல்வாழ்விற்கு உதவும் தாந்த்ரீக ரகசியங்கள் - பாகம்: 2


திங்கட்கிழமை  அன்று 7 வில்வ இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றில் குங்குமப்பூ கொண்டு "ஓம் சிவாய ஸமஸ்த தோஷ நிவாரணாய பட்"  என்று எழுதவும்.எழுதிய பின் "ஓம் சிவாய ஸமஸ்த தோஷ நிவாரணாய பட்" என்று 7 தடவை ஜெபிக்கவும். இப்படி ஒவ்வொரு வில்வ இலையிலும் எழுதி மேற்சொன்ன மந்திரத்தை 7 தடவை ஜெபிக்கவும்.7 இலைகளிலும் எழுதி, ஜெபித்து முடிந்த பின்னர் ஆலயத்தில் அல்லது வீட்டில் உள்ள சிவலிங்கத்திற்கு மேற்சொன்ன மந்திரத்தை ஜெபித்தபடியே வில்வ இலைகளைச் சமர்ப்பித்து சர்வ தோஷங்களும் நீங்க அர்ச்சனை செய்யவும். இவ்வாறு தொடர்ந்து 3 அல்லது 7 திங்கட்கிழமைகள் செய்து வர சர்வ தோஷங்களும்,  நாம் இப்பிறவியில் கொண்டுவந்த தீய கர்மாக்களின் பாதிப்புகளும் குறைந்து ,குடும்பம் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்து விளங்கும்.

அநேகர் நல்ல ஜோதிடர்களாக இருந்தாலும் ,சிலர் ஜோதிடத்தின் பெயராலும் ,மாந்திரீகத்தின் பெயராலும் மக்களிடம் அதிகப் பணத்தை அபகரித்து வருகின்றனர்.அதன் காரணமாகவே எனக்குத் தெரிந்த பல ஆன்மீக ரகசியங்களை ஒளிவு மறைவின்றி வெளியிடுகின்றேன்.இவை உத்தரவாதமான பலன்களைத் தர வல்லவை.பயன்படுத்திப் பலன் பெறுங்கள். 

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment