Wednesday 24 December 2014

பீஜத்ரயாத்மிக ஸ்ரீ த்ரிபுரபைரவி மந்திரம்





தசமஹாவித்யா என்ற 10 பெரும்தேவியரில் ஸ்ரீ த்ரிபுரபைரவி தேவியும் ஒரு சக்தி.தசமஹாவித்யா தேவியரில் விரைவான பலன்களைத் தருபவள் ஸ்ரீ திரிபுர பைரவியே.ஆன்மீக உயர்வு மட்டுமின்றி லௌகீக வாழ்வுக்கும் வறுமை,எதிர்ப்புகள் நீக்கி வளம் சேர்ப்பது இவள் வழிபாடு .ஸ்ரீ த்ரிபுரபைரவி எதிரிகள் தன் பக்தர்களுக்குத் துன்பம் செய்யாமல் தடுப்பதோடு அவர்களைத் தூரமாய்த் தள்ளி வைப்பவள்.மேலும் வளம்,புகழ்,வாழ்வில் நல்ல நிலையை அருள்பவள்.

ஏதேனும் ஒரு நல்ல நாளில் இரவு 10 மணி அல்லது அதற்கு மேல் இந்த மந்திர ஜபத்தைத் துவங்கலாம். குளித்து முடித்து சிகப்பு நிற ஆடை அணிந்து சிகப்புக் கம்பளம் அல்லது சிகப்புத் துணியில் வடக்கு முகமாக அமர்ந்துஜெபிக்கவும்.
ஜப எண்ணிக்கை 2500 ஐத் தாண்டிய பின் பலன் தரத்துவங்கும்.21000 உரு ஜெபித்தால் மந்திரம் முழுமையாகச் சித்தியாகும்.
வெற்றிலை,பாக்கு,தேங்காய்,மாதுளம்பழம் மற்றும் பழங்கள் படைக்கவும்.  
திரிபுர பைரவி யந்திரம் வைத்து ஜெபித்தால் நல்லது.அல்லது இதில் இணைத்துள்ள இந்த திரிபுர பைரவி யந்திரப் படத்தைப் ப்ரிண்ட் எடுத்து அதில் நான்கு மூலைகளிலும்  மற்றும் நடுவிலும்  அத்தர்,ஜவ்வாது,சந்தானம் போன்ற ஏதேனும் ஒரு வாசனைத் திரவியம் தடவி அதை முன்னால் வைத்துப் பூஜிக்கவும்.பூஜை முடிந்ததும் அதற்கு மலர் தூவி மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்து பிரேம் போட்டு வீட்டில் வடக்குப் பக்கம் மாட்டி வைத்துக்கொள்ளவும்.


மந்திரம் :-
ஹ்ஸ்த்ரைம்  ஹ்ஸ்க்லீம் ஹ்ஸ்த்ரௌம் ||

ஆங்கில உச்சரிப்பு :MANTRA IN ENGLISH :
HSTRAIM  HSKLEEM HSTRAUM

யந்திரம் 



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment