Tuesday 9 December 2014

நல்வாழ்விற்கு உதவும் தாந்த்ரீக ரகசியங்கள் - பாகம் :1


1.செல்வம் பெருக :-

பயன்படுத்தாத மற்றும் பழைய பொருட்களை வீட்டின் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் அல்லது அந்த திசையில் உள்ள மேற்கூரையில் வைத்தால் அந்த இடத்தில் நிரந்தர பணப்புழக்கம் இருக்காது.வேண்டுமானால் அந்த மாதிரியான பொருட்களை வீட்டின் தெற்குப் பகுதி அல்லது தெற்கே உள்ள அறையில் வைக்கலாம்.10 நாட்களுக்கு மேல் ஒரு பொருளை பயன்படுத்தாமல் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தாலோ அல்லது வீட்டை அல்லது ஒரு அறையை 10 நாட்களுக்கு மேல் அடைத்தே வைத்திருந்தாலோ தீய சக்திகள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் நுழைந்து குடிகொள்ளும்.அந்த வீட்டில் எப்போதும் சண்டை, சச்சரவுகள்,உறக்கமின்மை,கெட்ட கனவுகள்,தொடர் வியாதி போன்றவை சம்பவிக்கும்.இந்த பாதிப்புகள் நீங்க செவ்வாய்க்கிழமை  அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் சாம்பிராணி.குங்கிலியம்.கொஞ்சம் காய்ந்த அருகம்புல் இவை கொண்டு தூபம் போட (புகை போட)  தீய சக்திகள் நீங்கி வீடு சுபிட்சம் ,பெரும்.அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும்.

தூபம் போடும் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்தபடி போடவும்.

மந்திரம் :-
ஓம் ஹம் ஹனுமதே மாம் ரக்ஷ ரக்ஷ | மம குலம் ரக்ஷ ரக்ஷ||



2.ஆன்மீக முன்னேற்றம் வேண்டுவோர் தூங்கும் பொழுது கிழக்கே தலை வைத்து மேற்கே கால் நீட்டி தூங்க ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

3.தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டி படுத்து வர பொருளாதாரம் மேம்படும் .

4.வடக்கே தலை வைத்து உறங்கினால் மனோநிலையில் பாதிப்பு ஏற்படும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

1 comment: