Monday 15 December 2014

ஆன்மீக ரகசியங்கள்:பாகம் 8 (தாந்த்ரீகப் பரிகாரங்கள் )




1.தினமும்  சூர்யோதய வேளையில் சூரியனை நோக்கி நின்று 11 தடவை நீரால் தர்ப்பணம் கொடுக்க சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகி பெரிய மனிதர் என புகழும் படி கௌரவமான வாழ்வு அமையும்.ஒவ்வொரு முறை தர்ப்பணம்  கொடுக்கும் பொழுதும்  "ஓம் க்ருனிஹி சூர்யஆதித்யாய சர்வ தோஷ நிவாரணாய நமஹ"  என்று ஜெபித்தபடியே கொடுக்கவும்.

2.பித்ரு தோஷம் தீர :-

                     ஆள் நடமாட்டம் இல்லாத தனி இடத்தில் அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று  காலையில் தெற்கு நோக்கி நின்று 5 ஊதுவத்தி ஏற்றி முன்னோர்களை வழிபட்டு வரப் பித்ரு தோஷ கெடுபலன்கள்  நீங்கி சுபகாரியத்தடைகள் நிவர்த்தியாகி நலம் உண்டாகும்.மேலும்,உடல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறையத் துவங்கும்.


3. சூரியன் மறையும் வேளையில் ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீர் நிரப்பி அதன் அருகில் விளக்கேற்ற வீட்டில்,உடலில் ஆகாச மற்றும் ஜல பூத தோஷங்கள் இருந்தால் அவை நிவர்த்தியாகும்.

 
வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment