Wednesday 10 December 2014

சாந்தி கர்ம மந்திரம்


நம் மனோவிருப்பங்கள் நிறைவேற உதவும் பல பிரயோகங்கள் தாந்த்ரீக சாஸ்திரத்தில் இருந்தாலும் தாந்த்ரீகத்தின் முக்கியமான கர்மாக்கள் ஆறாகும்.அவற்றில் சாந்தி கர்மாவும் ஒன்று.ஆனால் மற்ற கர்மாக்கள் அளவிற்கு சாந்தி கர்மாவில் மக்கள் கவனம் செலுத்துவதோ,முக்கியத்துவம் கொடுப்பதோ இல்லை.ஆனால் என் பார்வையில் சாந்தி கர்மாவே மற்றவற்றை விடப் பிரதானமானது.ஏனென்றால் எவ்வளவுதான் செல்வம், சக்திகள்,புகழ் இருந்தாலும்,குடும்பத்தில்,மனதில் நிம்மதி,அமைதி இன்றி என்ன பயன்?.எனவே விதிமுறைப்படி செய்யப்படும் சாந்தி கர்மா பிரயோகம் இல்லத்தில்,மனதில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் நல்ல சூழலையும் மலரச்செய்யும்.நிம்மதி,மகிழ்ச்சி,நல்ல சூழல் இவை கிட்டினால் மட்டுமே இல்வாழ்க்கையிலும்,பொருளாதாரம்,ஆன்மீகத்திலும் தொடர்ந்து முன்னேற முடியும்.

எனவே  கிரகங்கள் ,தீவினைகளினால் மட்டுமின்றி நமது சொந்த புத்தியின் விகாரங்களான அதீத காமம்,அதீத கோபம்,அதீத துக்கம்,தீரா நோய்கள், பேராசையாலும் நமக்கு நிம்மதிக்குறைவு ஏற்படலாம்.சாந்தி கர்மா மந்திரம் ஜெபித்து வர நன்மை உண்டாகும்.

மாலை நேரத்தில் அரச மர வேரில் இனிப்பு கலந்த  நீரை விடவும்.பின்னர் அரசமர அடியில் அமர்ந்து ஊதுபத்தி ஏற்றி வைத்து கீழே உள்ள மந்திரத்தைக் குறைந்தது 108 தடவை ஜெபிக்கவும்.
அரசமர அடியில் அமர்ந்து ஜெபிக்க முடியாதவர்கள்  மாலை நேரத்தில் அரச மர வேரில் இனிப்பு கலந்த  நீரை விடவும்.பின்னர்,அரச மரத்தில் இருந்து வடக்கு பக்கம் உள்ள  வேர் அல்லது கிளையில் உள்ள குச்சியில் ஒன்றை ஒடித்து அதில் மஞ்சள் தடவி சிகப்புத் துணியில் வைத்து அரசங் குச்சியால்
இந்த மந்திரம் ஜெபித்து ஹோமம் செய்யலாம்.அதே பலன் கிடைக்கும்.

மந்திரம்:-

ஓம் நமஹ :ஷாந்தே ப்ரஷாந்தே ஓம் ஹ்ரீம் ஹ்ராம் சர்வ க்ரோத பிரசமனி ஸ்வாஹா ||

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment